பவுலின் இளமைக் காலத்தைப்பற்றிய குறிப்பை அப்போஸ்தலர்
நடபடிகள் நூல் தருவதாக மேலே கண்டோம். அதாவது சவுல் இளைஞனாயிருந்தபோது ஸ்தேவானின்
மரணத்தில் பெரும் பங்கு வகித்தார் (அப். 7:58; 22:20). ஸ்தேவானின் மரணம் நடந்தது
மார்சிலஸ் என்பவர் யூதேயாவின் ஆட்சியாளாக இருந்தபோதுநடந்தது. மார்சிலசுக்கு முன்
மாகாணத் தலைவராக இருந்த பொந்தியு பிலாந்து என்பவர் ஆட்சியாளராக இருந்தார். ஆனால்
சிரியாவின் உயர் நிலைத் தூதுவர் (Legate) பிலாத்துவின் மேல் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பிலாத்துவை
ரோமாபுரிக்குப் பேரரசனிடம் விசாரணைக்காக அனுப்பிவிட்டு பிலாத்துவுக்குப் பதிலாக
மார்சிலஸ் என்பவரை நியமித்தார். இவர் பதவி ஏற்ற காலம்கி.பி 36.
இந்த ஆண்டில் தான் ஸ்தேவானின் மரணமும் அதைத்
தொடர்ந்து,
பவுல்
கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதும் நடந்திருக்க வேண்டும். (அப். 83). பவுலின் தமஸ்கு பயணமும், அதைத் தொடர்ந்து பவுலின்
மனமாற்றமும் கி. பி. 36ல் நடந்ததாகக்
கணிக்கலாம். இந்தக் கணிப்பு ரோமச் சரித்திரத்துடன் நெருங்கியத் தொடர்புடையது.
இதன்படி,
பவுல்
எருசலேம் மன்றத்திற்குச் சென்ற ஆண்டும் கி பி, 49 உடன் ஒத்துப் போகின்றது. அதாவது
பவுலின் மனமாற்றத்திற்குப் பின் 14 ஆண்டுகளுக்குப் பின்
பவுல் எருசலேம் மன்றத்திற்குச் சென்றார் (கலா. 2:1). ஆனால் ஒரு சிலர் கலா. 1:18ல் சொல்லப்பட்டிருக்கின்ற
மூன்று ஆண்டுகளையும்,(கலா. 2:1)சொல்லப்பட்டிருக்கின்ற 14 ஆண்டுகளையும் சேர்த்து
மொத்தம் 17 ஆண்டுகளாகக் கணக்கிட்டு பவுலின் மனமாற்ற வருடத்தை கி. பி 33ல்
நடந்ததாக,
அதாவது மேலே
சொல்லப்பட்டதற்கு இன்றும் மூன்று ஆண்டுகளுக்குள் முன் நடந்ததாகக் கூறுகின்றார்கள்.
கலா2:1 ல்14 ஆண்டுகளுக்குப்பின்
என்பதை மனமாற்றித்திற்குப் பின் 14 ஆண்டுகள் என்று
கணக்கிட்டால் தான் மேலே கண்டவண்ணம் ரோமச் சரித்திரத்துடன் உடன்படும். 17 ஆண்டுகள் என்று
கணக்கிட்டால் ரோமச் சரித்திரத்துடன் உடன்படாது.14 ஆண்டுகள் என்று கணக்கிட்டால்
நடுத்தர வயதில் பவுல் மனமாற்றம் அடைந்தார் என்ற J. எரமியாஸின் கருத்தோடும் ஒத்துப்
போகின்றது. ஆகவே பவுலின் மனமாற்றம் கி பி. 36ல் நிகழ்ந்திருக்கலாம் எனக்
கொள்வது நலம்.
Comments
Post a Comment