பவுலின் வாழ்க்கையை அறிந்து கொள்ள அவரது கடிதங்கள், அப்போஸ்தல நடபடிகள் ஆகியவைகள்
மட்டுமே நமக்கு ஆதாரங்களாக உள்ளன. இவைகளின் பவுலின் கடிதங்களை முதன்மையான
ஆதாரமாகக் கொள்ளலாம். இவைகளின்று பவுலின் வாழ்வில் ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சிகளை
மட்டுமே நாம் அறிய முடியும். அப். 7:58ல்
பவுல் ஓர் வாலிபனாகவும்,
பிலமோன் 9ல் வயதுமிக்கவராகவும்
கூறப்படுகின்றார். இந்த இரு நிலைகளுக்கு முன்னும், பின்னும் எவை எவை நடந்தன என்று
ழுழுமையாகக் கூற நமக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.
பவுல் ஒரு பரிசேயன்.
கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட
இஸ்ரவேல் இனத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் பவுல். எபிரேயருக்குப்
பிறந்த எபிரேயன். பக்தியும்,
செல்வமும்
மிக்கக் குடும்பத்தில் தோன்றினவர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பக்தியிலும்
பாரம்பரியத்தினும் சிறந்த பரிசேயக் குழுவைச் சேர்ந்தவர். யூத ஒழுங்கின்படி எட்டாம்
நாளில் விருத்தசேதனம் பெற்றவர் (பிலி. 3:5
மு; ரோ. 11:1) இவருடன் சகோதரிகளும்
இவருக்கு இருந்தார்கள் (அப் 23
: 16)
பவுலின் வாழ்விடம் :-
பவுல் வாழ்ந்த தர்சு நகரம் சின்ன ஆசியாவின்
தென்கரையில் அமைந்திருந்த சிலிசியா நாட்டில் இருந்தது. (அப். 22 : 3). இது சிலிசியா நாட்டில்
பெயர் பெற்ற நகரம். (அப். 21;
39). இது
செல்வமும் கல்வியும் செழித்தோங்கி, கிரேக்க
நாகரிகமும்,
கிழக்கத்திய
நாகரிகமும் சந்திக்கும் இடமாய்த் திகழ்ந்தது. இந்நகரம் அந்தியோகு எப்பிபானசு iv (கி. மு. 175-164) என்பவரின் காலத்தில்
கிரேக்கக் கலாச்சாரத்தில் சிறந்த நகராக்கப்பட்டதாகச் சரித்திரச் சான்றுகள்
கூறுகின்றன.
கி. மு. 171ல்
தொழில் வியாபாரம் ஆகியவைகளுக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு யூதக்குடியிருப்பு (Jewish Colony) ஒன்றையும் எப்பிபானாசு
உருவாக்கினார். கி. மு. 66ல் பாம்பி சின்ன ஆசியாவைக்
கைப்பற்றி,
அதைத்
திருத்தி அமைத்த போது தர்சு நகரைத் சிலிசியாவின் தலை நகராக்கினார். முதல் நூற்றாண்டில்
ஸ்தோயிக்க,
எப்பிக்கூரர்
தத்துவ மேதைகள் இந்நகரில் நிறைந்து காணப்பட்டார்கள். இவர்கள் தங்களின் தத்துவக்
கருத்துக்களை மக்களுக்குப் புகட்டி, வந்தார்கள்.
ரோமப் பேரரசர்களான சிசரோ ,
ஜுலியஸ், சீசர், அகஸ்து போன்றவர்கள்
இந்நகரை அடிக்கடி பார்வையிட்டார்கள் என்பதிலிருந்து இந்நகரின் சிறப்பையும், வனப்பையும் பற்றிச்
சொல்லத் தேவையில்லை. இந்நகரில் கிரேக்கர்களுக்கே உரித்தான விளையாட்டு அரங்கங்கள், பல்கலைக் கழகங்கள் பல
இருந்தன.
பவுலின் பெற்றோர் சொந்தநாடான பலஸ்தீனாவில் கிஸ்காலா
என்னுமிடத்திலிருந்து வெளியேறி,
யூதரல்லாதவர்கள்
வாழ்ந்த நகரான தர்சுவில் குடியேறினார்கள் என்று ஜெரோம் குறிப்பிடுகின்றார்.
கிஸ்காலா ரோமரை கடைசியாக எதிர்த்துப் போரிட்ட கலிலேயாவிலுள்ள ஓர் இடம். ஆனால்
ரோமர்கள் வெற்றிபெற்றதால்,
இங்கு
வாழ்ந்தவர்களைக் கைதியாக்கி,
அவர்களைப்
பல்வேறு இடங்களில் குடியேற்றினார்கள். பவுலின் பெற்றோரும் இத்தருணத்தில்
சிறையாக்கப்பட்டு தர்சுவில் குடியேற்றப்பட்டார்கள் என்று பிரடரிக் பாரர்
கூறுகின்றார்.
பவுல் 12
முதல் 20 வயதாயிருக்கையில்
தர்சுவில் குடியேற்றப்பட்டார் என்று ஜெரோம் கூறும் கருத்தை செயூன் கிம் (Seyoon Kim) என்பவர் மறுக்கின்றார்.
மிஷ்னா ஒழுங்கின்படி,
ஒருவன் 15 வயதாயிருக்கும் போது
தான், யூதரபிக்குரிய சமயக்
கல்வியைப் பயில சேர்த்துக் கொள்ளப்படுவான் (Aboth 5:21). பவுல் தனது யூதச் சமயக்
கல்வியைப் பேராசிரியர் கமாலியேலிடத்தில் தனது 15 வயதில் தான் படிக்க துவங்கி
இருப்பார் என்று இவர் கூறி,
ஜெரோம்
சொல்லுகிறபடி 15 முதல் 20 வயதில் பவுல் தர்சு
போயிருக்க வேண்டும் என்பதை மறுக்கின்றார்.
பவுலின் பெற்றோர் பவுலின் எந்த வயதில் தர்சு நகர்
சென்றார்கள் என்பதைத் திட்டமாகக் கூற இயலாவிட்டாலும், அவர்கள் பலஸ்தீனாவிலிருந்து
தர்சுவிற்கு குடிபெயர்ந்து சென்றவர்கள் என்பதற்கு அப். 23: 16 துணை புரிகின்றது.
Comments
Post a Comment