தமஸ்குவில் தங்கிய பின் பவுல் முதல் முறையாக எருசலேம்
நோக்கிச் சென்றார். அங்கு பேதுருவை சந்திப்பதற்காகச் செல்கின்றார். அவருடன் 15 நாட்கள் தங்கி
இருந்தார். இக்காலத்தில் எருசலேமில் ஆண்டவரின் சகோதரனாகிய யாக்கோபுவைத் தவிர
அப்போஸ்தலர்களில் வேறு எவரையும் சந்திக்கவில்லை என்கிறார் (கலா. 1:18; அப். 9:26). பவுல் எருசலேமில்
இருந்தபோது அப்22:17ல் சொல்லப்பட்டக்
காட்சியைக் கண்டிருக்கலாம். பவுல் எருசலேமிற்குச் சென்ற காலம் கி. பி. 40 எனலாம்.
பவுல் இங்கிருக்கையில் அரேத்தா மன்னனின் ஆளுநர்
பவுலைக் கைதியாக்கி தமஸ்கு நகரின் வாயில்களில் காவலரை வைத்திருந்தான் (2கொ. 11:32). யூதர்களுக்கும் நெபத்தீய
மன்னனான அரேத்தாவிற்கும் நெருக்கமான உறவு அப்போது இருந்தது. ஏரோது அந்திப்பா
அரேத்தாவின் தங்கையை மணந்திருந்தார் என்று யூதச் சரித்திர ஆசிரியன் ஜோசியஸ்
கூறுகின்றார். எனவே பவுலைக் கொல்லத் திட்டமிட்ட யூதர்கள் அரேத்தா மன்னனின் உதவியை
நாடினார்கள் (அப். 9
23-25). அரேத்தா
மன்னன் கி. பி. 34க்குப் பின்னர் தான்
தமஸ்குவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். எனவே பவுல் கி. பி. 40ல் எருசலேமிற்கு முதல்
முறையாகச் 'சென்றார் என்ற
காலக்குறிப்பு சரியானதே.
Comments
Post a Comment