Skip to main content

யூதப் பின்னணியமா? கிரேக்கப் பின்னணியமா? - ஓர் வாதம் (பவுல் பயன்படுத்திய இறையியல் மூலங்கள்)

 

பவுலின் இறையியலுக்குரிய பின்னணியங்களைப் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஒரு சிலர் பவுலின் இறையியலுக்கு பலஸ்தீனா யூதப் பின்னணியம் மட்டுமே முற்றிலும் துணை புரிந்தது என்கின்றார்கள். இப்படிக் கூறுவதில் D. E H ஒயிட்லியும் ஒருவராவார். வான் உன்னிக் (van Unnik) என்பவர், பவுலின் பின்னணியம் தர்சு அல்ல எருசலேமே என்கிறார். ஆனால் புல்ட்மான் என்பவரும், மோன்டிபயர் என்ற யூத அறிஞரும், பவுலின் கிரேக்கப் பின்னணியத்தை வலியுறுத்துகின்றார்கள். புல்ட்மான் என்பவர், பவுல் வாழ்ந்த தர்சுவும், அங்கு நிலவிய கலப்புச் சமயக் கருத்துக்களும், கிரேக்கக் கலாச்சாரமும் பவுலின் பின்னணியம் என்கிறார்.

புல்ட்மான் பவுலின் கிரேக்கப் பின்னணியத்தை வலியுறுத்தினாலும், பவுல் கிறிஸ்துவை ஏற்குமுன் எந்த அளவிற்கு கிரேக்கச் சமயக் கருத்துக்களை அறிந்திருந்தார் என்பதைத் திட்டமாகக் கூறமுடியாது என்கிறார். மேலும் பவுலின் நிருபங்களை நோக்கினால், அவர் பலஸ்தீனா யூதச் சமயத்தினின்று மிகக்குறைவான அம்சங்களையே எடுத்தாண்டிருக்கின்றார் என்பது விளங்கும் என்கிறார். ஆனால் W. D. டேவிஸ் என்பவர். பவுலுக்கு யூதப் பின்னணியமே அதிகம் துணை புரிந்து என்றும், கிரேக்கத் தாக்கம் (Hellenistic influences) பவுலின் சிந்தனையில் மேற்பரப்பாக மட்டும் இருந்ததேயன்றி, அதுதான் அடித்தளம் என்று சொல்ல முடியாது என்கிறார். இவ்வாறு ஒரு சாரார் பவுலின் யூதப் பின்னணியத்தையும், மறு சாரார் கிரேக்கப் பின்னணியத்தையும் வலியுறுத்துகின்றார்கள். ஆயினும் பவுலுக்கு ஒரே ஒரு பின்னணியம் தான் உதவியது என்று முடிவெடுப்பது சரியாகாது. அப்படி முடிவெடுத்தால் பவுலைச் சரியாகப் புரிந்து கொள்ளவும் முடியாது.

பவுல் யூதரல்லாதாரிடையே வாழ்ந்திருந்தாலும், ஆர்வம் மிக்க யூதனாக வாழ்ந்தார் என்பதும், அவர் யூதத் திருமறை, பழக்க வழக்கங்கள் ஆகியவைகளை ஒருபோதும் விட்டுவிடவில்லை என்பதும் உண்மை. ஆயினும் அதே நேரத்தில் யூதரல்லாதாரிடையேயிருந்தும் பவுல் பல காரியங்களை அறிந்திருந்தார். அவைகளையும் தனது இறையியலைக் கட்டி எழுப்பப் பயன்படுத்தினார் என்பதும் உண்மையே.

யூதரல்லாதாரிடையே பவுல் கற்றவற்றையெல்லாம் அப்படியே கூறி விடாமல், கிறிஸ்தவக் கருத்தை விளக்கிக் காட்டுவதற்காக மட்டுமே அவைகளைத் தேவைப்பட்ட போது பயன்படுத்தினார். ஆகவே புறவினச் சமயங்களில் ஆர்வமோ அல்லது நாட்டமோ கொண்டு அவைகளைத் தன் இறையியலில் பயன்படுத்தாமல், யூதரல்லாதாருக்குத் தெரிந்த ஒன்றை எடுத்து அதன் வாயிலாக கிறிஸ்தவக் கருத்தை வலுயுறுத்தினார் என்பதே சாலப் பொருந்தும்.

Comments

Popular posts from this blog

பவுலின் பிறப்பு - பவுல் வாழ்க்கை வரலாறு (1)

  பவுலின் காலக் குறிப்புகள் பவுலின் கால நிகழ்ச்சிகளைப்பற்றிய திட்டமான ஆதாரம் இல்லாததால் இதுகாறும் ஓர் திட்டனை கால அட்டவனையை உருவாக்குவதில் அறிஞர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பவுல் முதல் நூற்றாண்டில் சேர்ந்தவர் என்பதும் , ரோம அரசாட்சியின் போது வாழ்ந்தவர் என்பதும் உறுதி. எனவே பவுலின் காலத்தில் , பவுலோடு தொடர்பாக ரோம அரசின் வரலாற்றில் நடந்த ஓரிரு நிகழ்ச்சிகளைப் பவுலின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு , ஓரளவுக்குப் பவுலின் காலத்தைக் கணிக்கலாம்.     பவுலின் பிறப்பு பவுல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த போதிலும் அக்காலத்தில் பாலஸ்தீனாவிலிருந்து இயேசுவைச் சந்தித்ததாக எவ்வித குறிப்பும் அவரது கடிதங்களில் இல்லை. 2 கொரி 5 :16 ன் அடிப்படையிலும் கூட பவுல் இயேசுவைச் சந்தித்தித்திருப்பார் என்று சொல்ல வாய்ப்பில்லை. அப். 7:58, பிலமோன் 9 ஆகிய வசனங்களின் அடிப்படையில் பவுல் கி. பி. 10 க்குப் பின்னர் பிறந்திருக்க முடியாது என்கிறார் ஜோசப் பிட்ஸ்மயர் என்ற அறிஞர். ஏனென்றால் அப்போஸ்தல நடபடிகள் நூலின் படி பவுல் இளைஞன். பிலமோனின் படி பவுல் வயதானவர். பிட்ஸ்மயரின் கருத்துப்படி...

பவுலும் - தர்சு நகரும் (பவுலின் வாழ்க்கை)

  பவுலின் வாழ்க்கையை அறிந்து கொள்ள அவரது கடிதங்கள் , அப்போஸ்தல நடபடிகள் ஆகியவைகள் மட்டுமே நமக்கு ஆதாரங்களாக உள்ளன. இவைகளின் பவுலின் கடிதங்களை முதன்மையான ஆதாரமாகக் கொள்ளலாம். இவைகளின்று பவுலின் வாழ்வில் ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமே நாம் அறிய முடியும். அப். 7:58 ல் பவுல் ஓர் வாலிபனாகவும் , பிலமோன் 9 ல் வயதுமிக்கவராகவும் கூறப்படுகின்றார். இந்த இரு நிலைகளுக்கு முன்னும் , பின்னும் எவை எவை நடந்தன என்று ழுழுமையாகக் கூற நமக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. பவுல் ஒரு பரிசேயன் .  கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் இனத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் பவுல். எபிரேயருக்குப் பிறந்த எபிரேயன். பக்தியும் , செல்வமும் மிக்கக் குடும்பத்தில் தோன்றினவர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பக்தியிலும் பாரம்பரியத்தினும் சிறந்த பரிசேயக் குழுவைச் சேர்ந்தவர். யூத ஒழுங்கின்படி எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவர் (பிலி. 3:5 மு ; ரோ. 11:1) இவருடன் சகோதரிகளும் இவருக்கு இருந்தார்கள் (அப் 23 : 16)  பவுலின் வாழ்விடம் :- பவுல் வாழ்ந்த தர்சு நகரம் சின்ன ஆசியாவின் தென்கரையில் அமைந்திருந்த...

பவுலின் மனமாற்றம் - பவுல் வாழ்க்கை வரலாறு (2)

  பவுலின் இளமைக் காலத்தைப்பற்றிய குறிப்பை அப்போஸ்தலர் நடபடிகள் நூல் தருவதாக மேலே கண்டோம். அதாவது சவுல் இளைஞனாயிருந்தபோது ஸ்தேவானின் மரணத்தில் பெரும் பங்கு வகித்தார் (அப். 7:58; 22:20). ஸ்தேவானின் மரணம் நடந்தது மார்சிலஸ் என்பவர் யூதேயாவின் ஆட்சியாளாக இருந்தபோதுநடந்தது. மார்சிலசுக்கு முன் மாகாணத் தலைவராக இருந்த பொந்தியு பிலாந்து என்பவர் ஆட்சியாளராக இருந்தார். ஆனால் சிரியாவின் உயர் நிலைத் தூதுவர் ( Legate) பிலாத்துவின் மேல் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் , பிலாத்துவை ரோமாபுரிக்குப் பேரரசனிடம் விசாரணைக்காக அனுப்பிவிட்டு பிலாத்துவுக்குப் பதிலாக மார்சிலஸ் என்பவரை நியமித்தார். இவர் பதவி ஏற்ற காலம்கி.பி 36. இந்த ஆண்டில் தான் ஸ்தேவானின் மரணமும் அதைத் தொடர்ந்து , பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதும் நடந்திருக்க வேண்டும். (அப். 83). பவுலின் தமஸ்கு பயணமும் , அதைத் தொடர்ந்து பவுலின் மனமாற்றமும் கி. பி. 36 ல் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தக் கணிப்பு ரோமச் சரித்திரத்துடன் நெருங்கியத் தொடர்புடையது. இதன்படி , பவுல் எருசலேம் மன்றத்திற்குச் சென்ற ஆண்டும் கி பி , 49 உடன் ஒத்துப் போகின்றது. ...