Skip to main content

பவுலின் அறிவாற்றல் (பவுலின் வாழ்க்கை)

 

பவுல் ஒரு பன்மொழிப் புலவர் என்றால் அது மிகையாகாது. பவுல் ஒரு யூதனாக, அக்காலப் பேச்சு மொழியான அரமேயத்தைக் கற்றுப் பேசினார் என்பதில் ஐயப்பட அவசியமில்லை. தமஸ்கு பாதையில் இயேசுவும் பவுலும் அரமேய மொழியிலேயே தொடர்பு கொண்டார்கள் என்பது பல அறிஞர்களின் கருத்து. காரணம் அரமேய மொழிதான் இயேசுவும், பவுலும் வாழ்ந்த காலத்தில் யூதர்களுக்குப் பேச்சு மொழியாக இருந்தது.

பவுல் தன்னை 'எபிரேயன்' (பிலி. 3:5) என்று அழைப்பதின் நோக்கம், தனக்கு அரமேய மொழியும், பலஸ்தீனாவின் கலாச்சாரமும் தெரியும் என்று காட்டவே என்கிறார் செயூன் கிம் என்ற அறிஞர் C. F. D. மோல் என்ற அறிஞர்.

பவுல் தன்னை எபிரேயன் என்று குறிப்பிடுவதன் நோக்கம் யாதெனில், தான் ஒரு கிரேக்க மொழி பேசும் யூதன். ஆனாலும் தனக்கு அரமேய மொழியும் தெரியும் என்பதைச் சுட்டிக் காட்டவே என்கிறார். பவுலின் எதிரிகளான கிரேக்க யூதர்கள் எருசலேமில் இருந்த போது அரமேயத்தையும் கற்றிருந்தார்கள். இவர்கள் திரும்பவும் தங்கள் சொந்த நாட்டிற்கு வந்தபோது. தாங்கள் அரமேய மொழியைக் கற்றிருந்ததன் அடிப்படையில் தங்களை எபிரேயர்கள் என அழைத்துக் கொண்டார்கள். ஆனால் பவுலையோ குறைத்து மதிப்பிட்டார்கள். இவ்வாறு தன்னைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு, பவுல் தானும் ஒரு எபிரேயன், தனக்கும் அரமேய மொழி தெரியும் என்பதைக் காட்ட பவுல் இப்படிச் சொன்னார் என்கிறார் செயூன் திம்.

பவுல் கமாலியேலிடத்தில் கற்ற கல்வி சாதாரணக் கல்வியன்று. அது யூத ரபி ஆவதற்குரிய கல்வி. அப்படியானால் எபிரேய மொழியில் எழுதப்பட்டிருந்த திருமறையையும் வழிபாட்டு முறைமைகளையும் பவுல் கண்டிப்பாக அறிந்திருப்பார். சில நேரங்களில் கிரேக்கத் திருமறையான செப்துவஜிந்திலிருந்து மேற்கோள் காட்டுவதை விட்டு விட்டு, எபிரேயத் திருமறையிலிருந்து பவுல் மேற்கோள் காட்டுவது இதை உறுதிப்படுத்துகின்றது. இதன்படி பவுல் எபிரேய மொழியிலும் தேர்ச்சிப் பெற்றவராயிருந்தார் என்பது தெளிவாகின்றது. (பிலி. 3 : 5; காண்க. அப். 22 : 2).

பவுல் கிரேக்க மொழியிலும் வல்லுணராயிருந்தார் (அப். 21:37). பவுல் தான் வாழ்ந்த பகுதியில் பிற மக்களோடு கிரேக்க மொழியிலேயே தொடர்பு கொண்டிருந்தார். ஏனென்றால் கிரேக்கர்களுக்கு கிரேக்கமே அரசு மொழியாகவும், பேச்சு மொழியாகவும் இருந்தது. பவுல் கிரேக்கத் திருமறையான செப்துவஜிந்திலிருந்து மேற்கோள்களைக் காட்டுவதாலும், தனது நிருபங்களைக் கிரேக்க மொழியிலேயே எழுதுவதாலும், தனது நிருபங்களில் கிரேக்க கவிஞர்களின் நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்தாள்வதாலும், பவுல் கிரேக்க மொழியில் சிறந்த வல்லுனராக இருந்தார் என்பது விளங்குகின்றது. கமாலியேலிடத்தில் சமயக் கல்வியைக் கற்றபோதே, கிரேக்க மொழியையும் பவுல் கற்றிருப்பார் என்கிறார் F. F. புரூஸ் என்ற அறிஞர்.

ஒருவர் ரோமக் குடியுரிமையைப் பெறவேண்டுமானால் கண்டிப்பாக ஓரளவாவது இலத்தீன் மொழியைக் கற்றிருக்க வேண்டும் என்பது ரோம அரசு ஆணை. இதன்படி பார்த்தால், பவுலும் இலத்தீன் மொழியைக் கற்றிருந்திருப்பார் என்று அனுமாணிக்க இடமுண்டு .

Comments

Popular posts from this blog

பவுலின் பிறப்பு - பவுல் வாழ்க்கை வரலாறு (1)

  பவுலின் காலக் குறிப்புகள் பவுலின் கால நிகழ்ச்சிகளைப்பற்றிய திட்டமான ஆதாரம் இல்லாததால் இதுகாறும் ஓர் திட்டனை கால அட்டவனையை உருவாக்குவதில் அறிஞர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பவுல் முதல் நூற்றாண்டில் சேர்ந்தவர் என்பதும் , ரோம அரசாட்சியின் போது வாழ்ந்தவர் என்பதும் உறுதி. எனவே பவுலின் காலத்தில் , பவுலோடு தொடர்பாக ரோம அரசின் வரலாற்றில் நடந்த ஓரிரு நிகழ்ச்சிகளைப் பவுலின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு , ஓரளவுக்குப் பவுலின் காலத்தைக் கணிக்கலாம்.     பவுலின் பிறப்பு பவுல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த போதிலும் அக்காலத்தில் பாலஸ்தீனாவிலிருந்து இயேசுவைச் சந்தித்ததாக எவ்வித குறிப்பும் அவரது கடிதங்களில் இல்லை. 2 கொரி 5 :16 ன் அடிப்படையிலும் கூட பவுல் இயேசுவைச் சந்தித்தித்திருப்பார் என்று சொல்ல வாய்ப்பில்லை. அப். 7:58, பிலமோன் 9 ஆகிய வசனங்களின் அடிப்படையில் பவுல் கி. பி. 10 க்குப் பின்னர் பிறந்திருக்க முடியாது என்கிறார் ஜோசப் பிட்ஸ்மயர் என்ற அறிஞர். ஏனென்றால் அப்போஸ்தல நடபடிகள் நூலின் படி பவுல் இளைஞன். பிலமோனின் படி பவுல் வயதானவர். பிட்ஸ்மயரின் கருத்துப்படி...

பவுலும் - தர்சு நகரும் (பவுலின் வாழ்க்கை)

  பவுலின் வாழ்க்கையை அறிந்து கொள்ள அவரது கடிதங்கள் , அப்போஸ்தல நடபடிகள் ஆகியவைகள் மட்டுமே நமக்கு ஆதாரங்களாக உள்ளன. இவைகளின் பவுலின் கடிதங்களை முதன்மையான ஆதாரமாகக் கொள்ளலாம். இவைகளின்று பவுலின் வாழ்வில் ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமே நாம் அறிய முடியும். அப். 7:58 ல் பவுல் ஓர் வாலிபனாகவும் , பிலமோன் 9 ல் வயதுமிக்கவராகவும் கூறப்படுகின்றார். இந்த இரு நிலைகளுக்கு முன்னும் , பின்னும் எவை எவை நடந்தன என்று ழுழுமையாகக் கூற நமக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. பவுல் ஒரு பரிசேயன் .  கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் இனத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் பவுல். எபிரேயருக்குப் பிறந்த எபிரேயன். பக்தியும் , செல்வமும் மிக்கக் குடும்பத்தில் தோன்றினவர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பக்தியிலும் பாரம்பரியத்தினும் சிறந்த பரிசேயக் குழுவைச் சேர்ந்தவர். யூத ஒழுங்கின்படி எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவர் (பிலி. 3:5 மு ; ரோ. 11:1) இவருடன் சகோதரிகளும் இவருக்கு இருந்தார்கள் (அப் 23 : 16)  பவுலின் வாழ்விடம் :- பவுல் வாழ்ந்த தர்சு நகரம் சின்ன ஆசியாவின் தென்கரையில் அமைந்திருந்த...

பவுலின் மனமாற்றம் - பவுல் வாழ்க்கை வரலாறு (2)

  பவுலின் இளமைக் காலத்தைப்பற்றிய குறிப்பை அப்போஸ்தலர் நடபடிகள் நூல் தருவதாக மேலே கண்டோம். அதாவது சவுல் இளைஞனாயிருந்தபோது ஸ்தேவானின் மரணத்தில் பெரும் பங்கு வகித்தார் (அப். 7:58; 22:20). ஸ்தேவானின் மரணம் நடந்தது மார்சிலஸ் என்பவர் யூதேயாவின் ஆட்சியாளாக இருந்தபோதுநடந்தது. மார்சிலசுக்கு முன் மாகாணத் தலைவராக இருந்த பொந்தியு பிலாந்து என்பவர் ஆட்சியாளராக இருந்தார். ஆனால் சிரியாவின் உயர் நிலைத் தூதுவர் ( Legate) பிலாத்துவின் மேல் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் , பிலாத்துவை ரோமாபுரிக்குப் பேரரசனிடம் விசாரணைக்காக அனுப்பிவிட்டு பிலாத்துவுக்குப் பதிலாக மார்சிலஸ் என்பவரை நியமித்தார். இவர் பதவி ஏற்ற காலம்கி.பி 36. இந்த ஆண்டில் தான் ஸ்தேவானின் மரணமும் அதைத் தொடர்ந்து , பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதும் நடந்திருக்க வேண்டும். (அப். 83). பவுலின் தமஸ்கு பயணமும் , அதைத் தொடர்ந்து பவுலின் மனமாற்றமும் கி. பி. 36 ல் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தக் கணிப்பு ரோமச் சரித்திரத்துடன் நெருங்கியத் தொடர்புடையது. இதன்படி , பவுல் எருசலேம் மன்றத்திற்குச் சென்ற ஆண்டும் கி பி , 49 உடன் ஒத்துப் போகின்றது. ...