தாயின் வயிற்றில் இருந்தபோதே தன்னை யூதரல்லாதோரின்
அப்போஸ்தலனாகப் பணி புரிய கடவுள் திட்டமிட்டுத் தன்னைத் தெரிந்துக் கொண்டார் என்ற
உள்ளுதல் பவுலுக்கு இருந்தது (கலா; ]: 15, 16). இயேசு மற்ற அப்போஸ்தலர்களுக்குக்
காட்சி தந்து அவர்களைத் திருப்பணிக்காக அழைத்தது போன்றே (காண்க . மத். 28:9-10, 16-20; மாற். 16:14-18; லூக். 24:13-35, 36. 43; யோ . 20:19-29, 21:1-23, அப். 1:3-9) தனக்கும் இயேசு காட்சி
தந்து, யூதரல்லாதாரிடையே நற்செய்திப்
பணிபுரிய தன்னை அழைத்தார் என்று பவுல் நம்பினார்.
யூதரல்லாதாரிடம் சென்று கடவுளின் பெயரை அறிவிக்கும்
கருவியாக பவுல் தன்னைக் கருதினார் (அப். 9:15; 26:18). தமஸ்கு பாதையில்
அருட்செய்தியின் தொண்டனாக இருக்க அழைப்பை மட்டுமன்றி, அப்பணியை நிறைவேற்றுவதற்குரிய
செய்தியும் தனக்கு அருளப்பட்டதாகப் பவுல் குறிப்பிடுகின்றார் (கலா. 1: 12:2, 7; 1 தெச 2:4; ரோ. 1:1; 15:15 1கொ . 1:17), அருட்செய்தியின்
அறிவிப்பைத் தானாகத் தெரிந்து கொள்ளவில்லை, அது தன் மேல் விழுந்த கடமை, அருட்செய்தியை அறிவிக்காவிட்டால்
தான் அழிந்தே போவேன் என நம்பினார் (1கொ
9:16மு. ; ரோ. 15:16) 1கொ. 3:10. 2கொ . 3:6; எபே. 3:7; 6:20; கொலோ . 1:25; 1தெச. 2:4). இவைகள் அனைத்தும்
பவுலுக்கு நற்செய்தியைப்பற்றி இருந்த ஆர்வத்தையும் உணர்வையும் காட்டுகின்றது.
பவுலின் பணியை தீவிர யூதக் கிறிஸ்தவர்கள் கேலி செய்து, அதற்கு எதிர்ப்பு
தெரிவித்தபோது (கலா. 3:1)
எருசலேமில்
மன்றத்தைக் கூட்டி,
இரு
சாராரும் கூடிப் பேசி முடிவெடுத்தார்கள். இம்முடிவின்படி, யூதருக்கு நற்செய்தியை
அறிவிக்கும் பொறுப்பை பேதுருவினிடமும் யூதரல்லாதோருக்கு நற்செய்தியை அறிவிக்கும்
பொறுப்பைப் பவுலினிடமும் ஒப்படைத்தார்கள். இது சமாதான முறையிலேயே நடந்தேறியது.
திருச்சபையின் தூண்கள் என்று எண்ணப்பட்டவர்களாகிய
யாக்கோபுவும். பேதுருவும்,
யோவானும்
பவுலோடு கைகுலுக்கித் தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும், சம்மதத்தையும்
தெரிவித்தார்கள். ஆகவே ஆதித்திருச்சபையே பவுலை யூதரல்லாதோரின் அப்போஸ்தலனாக
ஏற்றுக் கொண்டது என்பது தெளிவு (கலா: 2:7-10).
Comments
Post a Comment