யூத ரபிக்குரிய சமயக் கல்வியைக் கற்றிருத்த பவுல், யூத ரபியாக
இருக்கவேண்டுமானால் தெரிந்திருக்க வேண்டிய ஓர் தொழிலையும் அறிந்திருந்தார். ரபி R. யோகன்னான் என்பவர், ஒருவன் தன் தந்தையின்
தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலைத் தெரிந்து கொள்ளக் கூடாது என்கிறார். இதன்படி
பார்த்தால்,
பவுலின்
தந்தையின் தொழிலையே பவுல் செய்திருக்கவேண்டும். அதாவது பவுலின் தந்தையும்
பவுலைப்போன்று கூடாரம் செய்யும் தொழிலைச் செய்திருக்கவேண்டும் (அப். 18:3; 20:34; 1கொ. 9:12). ஆனால் கிறிசொஸ்தம் என்ற
திருச்சபைப் பெரியார்,
பவுலின்
தந்தைத் தோல் பதனிடும் தொழிலைச் செய்தார் என்கின்றார். இருப்பினும், தீவிர பரிசேயனும், பக்திமிக்கவருமான பவுலின்
தந்தை இத்தொழிலைச் செய்தார் என்பது ஐயத்திற்குரியதாக இருக்கின்றது.
த. பா. ஹட்சன் என்பவர் தர்சுவில் சிலிசியா என்ற அந்த
இடத்தின் பெயரால் ''சிலிசியம்"
என்றழைக்கப்பட்ட கூடாரத் துணிகளுக்காக உபயோகிக்கப்படும் வெள்ளாட்டு மயிர் வணிகம்
நடந்து வந்தது என்று கூறி,
இதனால்
பவுலின் தந்தை வெள்ளாட்டு மயிர் வியாபாரமோ அல்லது வெள்ளாட்டு மயிரினால் தயார்
செய்யப்பட்ட கம்பளத்துணி வியாபாரமோ செய்தவராயிருக்கலாம் என்கிறார். பவுல் தனது
தந்தையின் தொழிலாகிய மேற்கூறியத் தொழிலையே செய்தார் என்றும் இவர் கூறுகின்றார்.
Comments
Post a Comment