பவுலின் இறையியலை அறியவேண்டுமானால் அவரது இறையியலை
நிறுவ அவருக்குத் துணை செய்த மூலங்களை அறியவேண்டும். இயேசுவையும், அப்போஸ்தலர்களையும் பற்றி
அறிய யூதச் சிந்தனையை மட்டும் அறிந்தால் போதும். ஏனென்றால் இவர்கள் யூதர்களாக, யூதர்களிடையே
யூதச்சிந்தனையின் அடிப்படையில் பணியாற்றினார்கள். ஆனால் பவுல் இவர்களைவிட
வித்தியாசமானவர். பவுல் யூதராயிருந்தும், வேறுபட்ட
சூழல்களில் அதாவது கிரேக்க யூதச்சமயத்தினருக்கும், யூதரல்லாத புறவினத்தவருக்கும்
அவர்களுக்கே தெரிந்த,
புரிந்த
மொழியில்,
சிந்தனையின்
அடிப்படையில் அப்போஸ்தலனாய்ப் பணியாற்றினார். இதனால் பவுலைப் புரிந்து கொள்ள அவர்
யாரிடம் பேசினார்,
என்ன
பேசினார்,
ஏன் அவ்வாறு
பேசினார்,
என்ன உள்
கருத்துடன் பேசினார் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காண வேண்டும்.
பவுல் இனத்தால் யூதனாக, அதுவும் ஆர்வமிக்க யூதனாக
இருந்ததால் அவரது யூத பின்னணியத்தையும், கிரேக்க
பண்பாடு,
கலாச்சாரம், கல்வி, சமயங்கள், தத்துவக் கோட்பாடுகள் நிறைந்த
சிசிலியா நாட்டுத் தர்சு நகரில் பலகாலம் வாழ்ந்தால் அவரது கிரேக்கப்
பின்னணியத்தையும்,
மனமாற்றத்திற்குப்
பின் கிறிஸ்தவர்களுடனும்,
திருத்தூதுவர்களுடனும்
நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் அவரது கால கிறிஸ்தவப் பின்னணியத்தையும் அறிவது
அவசியம். ஏனென்றால் இந்தப் பின்னணியங்கள் தான் பவுலின் இறையியலுக்கு ஆதாரமாக
அமைந்தன.
Comments
Post a Comment