Skip to main content

பவுலின் தமஸ்கு அனுபவம் (பவுலின் வாழ்க்கை)

 

பவுல் தமஸ்குவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தவும், அவர்களைக்கட்டி எருசலேமிற்குக் கொண்டு வரவும் தலைமை ஆசாரியனிடம் அதிகாரப்பத்திரம் வாங்கிக் கொண்டு, தமஸ்கு நோக்கிச் செல்கையில் உயிர்த்த கிறிஸ்து பவுலைச் சந்தித்தார். இந்நிகழ்ச்சி பவுலின் வாழ்க்கையில் எண்ணத்தில், நோக்கத்தில் பெரிய மாற்றத்தையே உண்டாக்கியது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டமைக்காக கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தச் சென்ற பவுல், கிறிஸ்துவுக்காகத் துன்பப்படத் தன்னைத் தமஸ்கு பாதையில் அர்ப்பணித்தார். (அப். 9:1-22)

தமஸ்கு பயணத்தின் போது தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை தான் உருவாக்கிய திருச்சபைகளில் பாதிக்கு மேலான சபைகளுக்குத் தெரிவிக்கின்றார். (கலா. 1:11-17; 1கொ 9:1; 15:8; பிலி. 3:6-7) ஆகிய பகுதிகளில் நேரடியாகத் தன் மனமாற்றத்தை அல்லது தனக்குக் கிடைத்த அழைப்பைப் பற்றிப் பேசுகின்றார். இதோடு ரோ. 10:2-4; 1கொ. 9:16-17; 2கொ . 3:4-4:6, 5:16; எபே. 3:1-13 கொலோ. 1:23-29; 1தீமோ. 1:11-14 ஆகிய பகுதிகளிலேயும் கூட பவுல் தன் மனமாற்றத்தைப் பற்றிக் கூறுகின்றார் என்று செயூன் கிம் போன்ற அறிஞர்கள் கருதுகின்றார்கள். ஒருவேளை நேரடியாக பேசாவிட்டாலும். மறைமுகமாகப் பேசுகின்றார். இப்பகுதிகளில் மனமாற்றத்தைப் பற்றியக் குறிப்புகள் இலைமறைக் காய்களாய் மறைந்திருக்கின்றன என்று கருதுகின்றார்கள்.

பவுலின் கடிதங்களோடு அப்போஸ்தலர் நடபடிகள் நூலிலும் பவுலின் மனமாற்றம் பற்றி மும்முறை காணப்படுகின்றது. அவற்றில் இரண்டு வரலாறுகள் பவுலே தன் சுயசரிதையைச் சொல்லுவது அமைந்துள்ளது (அப். 9:1-19; 22:6-16; 26:12-18).

இன்று மனமாற்றத்திற்குத் தரும் விளக்கத்தோடு பவுலின் மனமாற்றத்தைச் சிந்திக்கக் கூடாது. ஏனென்றால் இன்றைய நிலையில் மனமாற்றம் என்பது, பாவ நிலையிலிருந்து மனமாறி, பாவமற்ற நிலைக்குள்ளாக அல்லது முன்பு செய்த பாவங்களை இனி மேல் செய்யாமல் இருக்கும் ஓர் நிலையை அடைவதையே குறிக்கிறது. ஆனால் பவுலின் வாழ்வில் இப்படிப்பட்ட மனமாற்றம் ஏற்படவில்லை. பவுல் பாவ வாழ்வினின்று மனமாறி, பாவமில்லாத நிலைக்கோ, அல்லது கடவுள் நம்பிக்கையின்மையிலிருந்து கடவுள் நம்பிக்கைக்கோ அவர் மனமாறி வந்தார் என்றோ, அல்லது ஒரு சமயத்தினின்று இன்னொரு சமயத்திற்கு, இருளினின்ற ஒளிக்கு பவுல் மனமாறி வந்தார் என்றோ சொல்லமுடியாது. (காண்க. அப். 26:18; ரோ 2:19; எபே 5:8; 1தெ. 5:40).

பவுல் தமஸ்கு பயணத்திற்கு முன்னும், அதற்குப் பின்னும் நியாயப்பிரமாணத்தின்படி குற்றமற்றவர் (பிலி 3:6; அப். 26:5). யூதருக்குள் அவருடைய வயதுள்ள பிறரைவிட மேம்பட்டவராய்ப் பவுல் விளங்கினார் (கலா. 1:14). ஆகவே பவுல் மனமாறினார் எனும்போது, பவுலின் இறையியல் சிந்தனையில் மாற்றம் அல்லது புது எண்ணம் பிறந்தது என்பதே சாலப் பொருத்தமாகும்.

பலர் பவுலின் மனமாற்றம் என்று தமஸ்கு அனுபவத்தைச் சொல்லக் கூடாது. மனமாற்றம் அல்ல அழைப்பையே பவுல் பெற்றார் என்பார்கள். பவுல் அழைப்பைப் பெற்றாலும். பவுலின் எண்ணத்திலும் மாற்றம் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

பவுல் பெற்ற மனமாற்றத்தில் பின் வரும் அம்சங்களைக் குறிப்பிட்டுச் செல்லலாம்.

(i) அவர் இயேசுவே கிறிஸ்து என ஏற்றுக் கொண்டார்.

(ii) யூத சமயம் நீதிச் சட்டத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதைப்பற்றிய உணர்வு பெற்றார்.

(iii) இயேசுவின் மூலம் வரும் நீதியாகிய மீட்பு யூதருக்கு மட்டுமுரியதன்று அது அனைவருக்குமுரியது எனப் புரிந்து கொண்டார். ஆகவே தமஸ்கு பாதையில் மனமாற்றமும், அழைப்பும் பவுலுக்கு ஏற்பட்டது என்று கூறுவது பொருந்தும்.

Comments

Popular posts from this blog

பவுலின் பிறப்பு - பவுல் வாழ்க்கை வரலாறு (1)

  பவுலின் காலக் குறிப்புகள் பவுலின் கால நிகழ்ச்சிகளைப்பற்றிய திட்டமான ஆதாரம் இல்லாததால் இதுகாறும் ஓர் திட்டனை கால அட்டவனையை உருவாக்குவதில் அறிஞர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பவுல் முதல் நூற்றாண்டில் சேர்ந்தவர் என்பதும் , ரோம அரசாட்சியின் போது வாழ்ந்தவர் என்பதும் உறுதி. எனவே பவுலின் காலத்தில் , பவுலோடு தொடர்பாக ரோம அரசின் வரலாற்றில் நடந்த ஓரிரு நிகழ்ச்சிகளைப் பவுலின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு , ஓரளவுக்குப் பவுலின் காலத்தைக் கணிக்கலாம்.     பவுலின் பிறப்பு பவுல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த போதிலும் அக்காலத்தில் பாலஸ்தீனாவிலிருந்து இயேசுவைச் சந்தித்ததாக எவ்வித குறிப்பும் அவரது கடிதங்களில் இல்லை. 2 கொரி 5 :16 ன் அடிப்படையிலும் கூட பவுல் இயேசுவைச் சந்தித்தித்திருப்பார் என்று சொல்ல வாய்ப்பில்லை. அப். 7:58, பிலமோன் 9 ஆகிய வசனங்களின் அடிப்படையில் பவுல் கி. பி. 10 க்குப் பின்னர் பிறந்திருக்க முடியாது என்கிறார் ஜோசப் பிட்ஸ்மயர் என்ற அறிஞர். ஏனென்றால் அப்போஸ்தல நடபடிகள் நூலின் படி பவுல் இளைஞன். பிலமோனின் படி பவுல் வயதானவர். பிட்ஸ்மயரின் கருத்துப்படி...

பவுலும் - தர்சு நகரும் (பவுலின் வாழ்க்கை)

  பவுலின் வாழ்க்கையை அறிந்து கொள்ள அவரது கடிதங்கள் , அப்போஸ்தல நடபடிகள் ஆகியவைகள் மட்டுமே நமக்கு ஆதாரங்களாக உள்ளன. இவைகளின் பவுலின் கடிதங்களை முதன்மையான ஆதாரமாகக் கொள்ளலாம். இவைகளின்று பவுலின் வாழ்வில் ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமே நாம் அறிய முடியும். அப். 7:58 ல் பவுல் ஓர் வாலிபனாகவும் , பிலமோன் 9 ல் வயதுமிக்கவராகவும் கூறப்படுகின்றார். இந்த இரு நிலைகளுக்கு முன்னும் , பின்னும் எவை எவை நடந்தன என்று ழுழுமையாகக் கூற நமக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. பவுல் ஒரு பரிசேயன் .  கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் இனத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் பவுல். எபிரேயருக்குப் பிறந்த எபிரேயன். பக்தியும் , செல்வமும் மிக்கக் குடும்பத்தில் தோன்றினவர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பக்தியிலும் பாரம்பரியத்தினும் சிறந்த பரிசேயக் குழுவைச் சேர்ந்தவர். யூத ஒழுங்கின்படி எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவர் (பிலி. 3:5 மு ; ரோ. 11:1) இவருடன் சகோதரிகளும் இவருக்கு இருந்தார்கள் (அப் 23 : 16)  பவுலின் வாழ்விடம் :- பவுல் வாழ்ந்த தர்சு நகரம் சின்ன ஆசியாவின் தென்கரையில் அமைந்திருந்த...

பவுலின் மனமாற்றம் - பவுல் வாழ்க்கை வரலாறு (2)

  பவுலின் இளமைக் காலத்தைப்பற்றிய குறிப்பை அப்போஸ்தலர் நடபடிகள் நூல் தருவதாக மேலே கண்டோம். அதாவது சவுல் இளைஞனாயிருந்தபோது ஸ்தேவானின் மரணத்தில் பெரும் பங்கு வகித்தார் (அப். 7:58; 22:20). ஸ்தேவானின் மரணம் நடந்தது மார்சிலஸ் என்பவர் யூதேயாவின் ஆட்சியாளாக இருந்தபோதுநடந்தது. மார்சிலசுக்கு முன் மாகாணத் தலைவராக இருந்த பொந்தியு பிலாந்து என்பவர் ஆட்சியாளராக இருந்தார். ஆனால் சிரியாவின் உயர் நிலைத் தூதுவர் ( Legate) பிலாத்துவின் மேல் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் , பிலாத்துவை ரோமாபுரிக்குப் பேரரசனிடம் விசாரணைக்காக அனுப்பிவிட்டு பிலாத்துவுக்குப் பதிலாக மார்சிலஸ் என்பவரை நியமித்தார். இவர் பதவி ஏற்ற காலம்கி.பி 36. இந்த ஆண்டில் தான் ஸ்தேவானின் மரணமும் அதைத் தொடர்ந்து , பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதும் நடந்திருக்க வேண்டும். (அப். 83). பவுலின் தமஸ்கு பயணமும் , அதைத் தொடர்ந்து பவுலின் மனமாற்றமும் கி. பி. 36 ல் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தக் கணிப்பு ரோமச் சரித்திரத்துடன் நெருங்கியத் தொடர்புடையது. இதன்படி , பவுல் எருசலேம் மன்றத்திற்குச் சென்ற ஆண்டும் கி பி , 49 உடன் ஒத்துப் போகின்றது. ...