எருசலேமிலிருந்து தப்பி பவுல் சீரியா , சிலிசியா பகுதிகளுக்குச் சென்றார் (கலா. 1:21-22). இப்பகுதியை பவுல் அடைந்தது கி. பி. 40 ல் , இங்கு நற்செய்திப் பணியாற்றியதோடு , பல ஆண்டுகள் தங்கியுமிருந்தார். ஏறத்தாழ 5 ஆண்டுகள் கி. பி. 40 முதல் 45 வரை இப்பகுதிகளில் தங்கிப் பணியாற்றினார். 2 கொ. 11:25 முதல் உள்ளவசனங்களில் காணப்படும் பாடுகளில் ஒரு சிலவற்றையாவது பவுல் இங்கு அனுபவித்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு. அதன்பின் தனது இருப்பிடமாகிய தர்சு நகரம் சென்றார். பவுல் தாய்ச்சபையோடு செலவிட்ட நாட்கள் மிகக் கொஞ்சம். தர்சுவில் இருந்த போதும் பவுல் நற்செய்திப்பணி செய்தார். 2 கொ. 12:2-4 ல் உள்ள திருக்காட்சியும் , வெளிப்பாடும் பவுலுக்கு இக்காலத்தில் கிடைத்திருக்கலாம். பவுல் இங்கிருக்கையில் தான் பர்னபாபவுலைத் தேடி தர்சு நகர் வந்தார். இங்கு பவுலைக்கண்டு. அந்தியோகியாவுக்கு அவரை அழைத்து வந்து திருச்சபை மக்களுடன் ஓராண்டு காலம் இருவரும் சேர்ந்து திருப்பணி ஆற்றினார்கள் (அப். 11:25-26).
Life and Theology of Saint Paul