தாயின் வயிற்றில் இருந்தபோதே தன்னை யூதரல்லாதோரின் அப்போஸ்தலனாகப் பணி புரிய கடவுள் திட்டமிட்டுத் தன்னைத் தெரிந்துக் கொண்டார் என்ற உள்ளுதல் பவுலுக்கு இருந்தது (கலா ; ]: 15, 16). இயேசு மற்ற அப்போஸ்தலர்களுக்குக் காட்சி தந்து அவர்களைத் திருப்பணிக்காக அழைத்தது போன்றே (காண்க . மத். 28:9-10, 16-20; மாற். 16:14-18; லூக். 24:13-35, 36. 43; யோ . 20:19-29, 21:1-23, அப். 1:3-9) தனக்கும் இயேசு காட்சி தந்து , யூதரல்லாதாரிடையே நற்செய்திப் பணிபுரிய தன்னை அழைத்தார் என்று பவுல் நம்பினார். யூதரல்லாதாரிடம் சென்று கடவுளின் பெயரை அறிவிக்கும் கருவியாக பவுல் தன்னைக் கருதினார் (அப். 9:15; 26:18). தமஸ்கு பாதையில் அருட்செய்தியின் தொண்டனாக இருக்க அழைப்பை மட்டுமன்றி , அப்பணியை நிறைவேற்றுவதற்குரிய செய்தியும் தனக்கு அருளப்பட்டதாகப் பவுல் குறிப்பிடுகின்றார் (கலா. 1: 12:2, 7; 1 தெச 2:4; ரோ. 1:1; 15:15 1 கொ . 1:17), அருட்செய்தியின் அறிவிப்பைத் தானாகத் தெரிந்து கொள்ளவில்லை , அது தன் மேல் விழுந்த கடமை , அருட்செய்தியை அறிவிக்காவிட்டால் தான் அழிந்தே போவேன் என நம்பினார் ( 1 கொ 9:16 மு. ; ரோ. 15:16) 1 கொ. 3:10. 2 கொ...
Life and Theology of Saint Paul